இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இறைவா!
ஏஏ! இறைவனே, ஏதோ மாந்தனை அருமைப் பொருளாய்ப் படைத்துவிட்டதாய்ப் பெருமை கொள்ளாதே, இறுமாப் புறாதே. படைப்புரு வானவன் மாந்தனா? இல்லை; களிமண் பாவை கழிசடைப் படைப்பு! சீரிலா இந்த ஓவியம் விடுத்து வேறோா் ஓவியம் தீட்டு! வீறுடை மாந்தனைப் படைப்பாய், இறைவா! பொம்மைகள் படைப்பது செம்மை அல்லவே.
30