பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



    இறைவா!
    ஏஏ! இறைவனே, ஏதோ மாந்தனை 
    அருமைப் பொருளாய்ப் படைத்துவிட்டதாய்ப் 
    பெருமை கொள்ளாதே, இறுமாப் புறாதே. 
    படைப்புரு வானவன் மாந்தனா? இல்லை;
    களிமண் பாவை கழிசடைப் படைப்பு! 
    சீரிலா இந்த ஓவியம் விடுத்து 
    வேறோா் ஓவியம் தீட்டு! வீறுடை 
    மாந்தனைப் படைப்பாய், இறைவா! 
    பொம்மைகள் படைப்பது செம்மை அல்லவே.



                     30