பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



    இளம்பிறையே
    காணும் இளம்பிறையே - விழிக் 
    காதல் குடியிருப்பே! 
    தோணும் நின் பாதையிலே - பல 
    ஆயிரம் ஆயிரமாய்ப் 
    பூணும் விழி வலைகள் - நின் 
    போக்கினில் சார்ந்தனவே. 
    நாணுதல் விட்டொழிவாய் - இன்றுன்
    நலிந்த தோற்றம் எண்ணி 
    மாணும் முழுநிலவு - உன்னில் 
    மண்டி உளதறிவாய்!





                     34