பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



    சமுதாயத் துயர்வெல்லாம் 
    ஒற்றுமையால் உண்டு! 
    தழைத்தோங்கும் அன்பிலையேல் 
    இல்லைஉயிா் வாழ்க்கை!
    சமுதாய இன்னொளியை 
    ஒற்றுமையாம் நெருப்பே 
    சமைத்தளிக்கும் ஞாயிறின்றேல் 
    ஒளியுண்டோ கூறீா்?
    சமுதாயம் ஓர் இனமாய் 
    ஒன்றுபட்ட கருத்தில் 
    ஒரேகொள்கை ஓருணர்ச்சி 
    சாா்ந்திடுதல் வேண்டும்.



                   37