இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காலம் அனைத்தும் மக்கள்தம்
கருத்தில் அகலா திருப்பவர்கள்
ஞாலத் துள்ளே இருவர்தாம்-
ஒருவர் வள்ளல்; மற்றொருவா்
சாலச் சிறக்கும் பாவாணர்;
தகைசேர் இருவர் ஒன்றாகி
மேலச் சிறந்த சங்கு அப்துல்
காதர் மெய்யன் பாகினரே!
தோளாண்மை யாலே தொழிலில் சளைக்காமல்
தாளாண்மை தந்த தகுபொருளைச்செந்தமிழுக்கு
வேளாண்மை செய்யும் விருப்பினர்க்கு வையகம்
நாளாண்மை செய்யும் நயந்து.
த. கோவேந்தன்