பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



   
   காலம் அனைத்தும் மக்கள்தம்
   கருத்தில் அகலா திருப்பவர்கள்
   ஞாலத் துள்ளே இருவர்தாம்-
   ஒருவர் வள்ளல்; மற்றொருவா்
   சாலச் சிறக்கும் பாவாணர்;
   தகைசேர் இருவர் ஒன்றாகி
   மேலச் சிறந்த சங்கு அப்துல்
   காதர் மெய்யன் பாகினரே!
தோளாண்மை யாலே தொழிலில் சளைக்காமல்
தாளாண்மை தந்த தகுபொருளைச்செந்தமிழுக்கு
வேளாண்மை செய்யும் விருப்பினர்க்கு வையகம்
நாளாண்மை செய்யும் நயந்து.

                                  த. கோவேந்தன்