பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



    இழிவு
    வேற்றவர் கல்வியைக் கற்கிறீா், பொருந்தா
    விருந்துண் டுடலுயிர் நைகிறீா், 
    மாற்றவர் சுண்ணம் முகத்தினில்-பூசி 
    மாயப்பொய் வண்ணம் உவக்கிறீா்.
    நேற்று அவர் கைக்கொள் முறையினில்-பெறும் 
    ஊதியம் நூறாய் அடுக்குறீா்.
    ஆற்றல் மிகும் உங்கள் உள்ளங்கள்-பிறர் 
    கருத்தின் அடிமைகள் ஆயின!
    ஊற்றடைத் தேகடன் வாங்கிய - பிறர் 
    கற்பனை ஆசையே உங்களின்  
    தோற்றம் செயலினில் நிறைந்துள - உங்கள் 
    தூய வடிவினைக் காண்கிலேன்.
    ஊற்ற மிகும்உகிா் வல்லூறு - கல்வி 
    ஒருசிறு வாத்திடம் கொள்வதா? 
    ஏற்ற மிகும்ஒளி ஞாயிறு - விண் 
    மீன்களினால் எழில் ஏற்பதா?