பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



    நிலமுடையீர்
    ஊரை வளைத்துச் 
    சுரண்டிப் பிழைக்கும் 
    நிலத்தை உடையவரே! 
    சீரைத் தரும் நம் 
    இறைவன் உலகை 
    வாழ்வு சிறப்புறவே
    யார்க்கும் ஈந்தான் 
    அன்புப் பரிசாய்; 
    என்றன் மொழிகேளீர்: 
    ஆர்க்கும் பசிக்குப் 
    பிடிசோ றுண்பீர் 
    அதற்கும் மேலாகப்
    புதைக்கும் குழிக்குள் 
    வேண்டும் போது 
    போனால் போதாதோ? 
    அதையும் உங்கள் 
    உடைமைப் பிடிக்குள்
    அடக்கப் பாராதீர்.