இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தோழனே!
அன்புடைத் தோழனே,
நின்னுடை வாழ்க்கை
ஒவ்வொரு கணமும்
வெவ்வேறு ஒவியம்.
மதிப்பு மிகுந்த
புதுப்புதுப் பொருளை
ஊக்கத் தாலே
உலகுக் களிப்பாய்.
தேக்கம் என்பது
சிறிதும் இல்லை
இன்றும் தேற்றும்
ஒன்றாய்,
மாறாதிருக்குமேல்
உன்னுடைய வாழ்க்கை
நெருப்பொளி இல்லாமல்
அருமை இழக்குமே!
52