இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அடைபட்டால்...
மலரின் மொக்கில்
காற்றடை பட்டால்
மணத்தைப் பெறுகிறது;
கலைமான் கொப்பூழ்
அடையும் கந்தம்
மான்மதம் ஆகிறது.
அலைக்கும் கடலில்
சிப்பிக்குள்மணல்
அணிமுத்தாகிறது;
நிலைக்கும் மாந்தர்
அன்புறு நெஞ்சால்
நேயம் மணக்காதோ?
61