பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     அடைபட்டால்...

     மலரின் மொக்கில்
     காற்றடை பட்டால்
     மணத்தைப் பெறுகிறது;
     கலைமான் கொப்பூழ்
     அடையும் கந்தம்
     மான்மதம் ஆகிறது.

     அலைக்கும் கடலில்
     சிப்பிக்குள்மணல்
     அணிமுத்தாகிறது;
     நிலைக்கும் மாந்தர்
     அன்புறு நெஞ்சால்
     நேயம் மணக்காதோ?

61