இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நீ
தோன்றுக என்றார் ஆண்டவனார்
தோன்றினை நீயே மானிடனாய்;
காண்பதற் கியலாக் கடவுட்கே
கண்படும் சான்று நீயுலகில்;
விரிந்தஇவ் வுலகில் மாந்தன்நின்
விரிபெரு வலிமைக் கிணையில்லை;
உறுதியாய் நீ,கால் ஊன்றிநட!
உறுதியாய் வாழ்வு செழித்திடுமே!
63