பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

     நீ

     தோன்றுக என்றார் ஆண்டவனார்
     தோன்றினை நீயே மானிடனாய்;

     காண்பதற் கியலாக் கடவுட்கே
     கண்படும் சான்று நீயுலகில்;

     விரிந்தஇவ் வுலகில் மாந்தன்நின்
     விரிபெரு வலிமைக் கிணையில்லை;

     உறுதியாய் நீ,கால் ஊன்றிநட!
     உறுதியாய் வாழ்வு செழித்திடுமே!

63