பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     சோா்வு நீக்கு

     எத்துணை எத்துணைக் காலம் - அட
     வாழ்க்கை எனும் உடைதன்னைப்
     பொத்தலும் கந்தலுமாக - நீ
     போட்டு நலிந்தழிகின்றாய்.

     புத்தம் புதிய மணமும் - இன்பம்
     பொலியும் ஒளிமிகு வாழ்வும்
     இத்தரை எய்திட வேண்டும் - வாழ்வில்
     இன்மலா் பூத்திட வேண்டும்.

     பொத்திக் கொள்ளாதே நின்கண்ணை - அகப்
     புலாி விடியலைக் காண்பாய்!
     மெத்தச் சிறந்த ஓர்பொருளை-வாழ்க்கை
     மேவிட ஆக்குவாய் தோழா!

71