இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பெண்மையே!
பெண்மையே தெய்வீகமே - மொழி
பேசாியாப் புகழே!
மண்ணில் எம் இயக்கம் எல்லாம் - நின்
வாழ்வால் நடப்பவையே.
எண்ணும் எம் எண்ணமெல்லாம் - நின்
ஏற்றம் அமைப்பவையே,
பண்ணும் தொழில்கள் எல்லாம் - நின்
பண்பால் இயங்கிடுமே.
கண்ணாய்ச் சமுகத்தினை - என்றும்
காப்பவள் நீயல்லவோ
மண்எனும் ஓவியத்தை - எழில்
மாண்புறச் செய்பவள் நீ.
பெண்மையின் அன்பிசையே - வாழ்க்கைப்
போிசைப் பண்ணரங்காம்.
இ-5