பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     பெண்மையே!

     பெண்மையே தெய்வீகமே - மொழி
     பேசாியாப் புகழே!
     மண்ணில் எம் இயக்கம் எல்லாம் - நின்
     வாழ்வால் நடப்பவையே.

     எண்ணும் எம் எண்ணமெல்லாம் - நின்
     ஏற்றம் அமைப்பவையே,
     பண்ணும் தொழில்கள் எல்லாம் - நின்
     பண்பால் இயங்கிடுமே.

     கண்ணாய்ச் சமுகத்தினை - என்றும்
     காப்பவள் நீயல்லவோ
     மண்எனும் ஓவியத்தை - எழில்
     மாண்புறச் செய்பவள் நீ.
     பெண்மையின் அன்பிசையே - வாழ்க்கைப்
     போிசைப் பண்ணரங்காம்.

இ-5