இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வளர்பிறை
செங்கதிர்த் தோணி கவிழ்ந்தது
நீல்நிற ஆற்றிலே - அதன்
அங்கப் பலகை மிதந்ததே
ஆற்றெழில் ஊற்றிலே.
வான ஒளித்தட்டில் மாலை
வடித்தது செங்குருதி - இயற்கை
ஆன சுடர்வாள் ஞாயிற்றின்
ஆகம் பிளந்ததுவோ?
மாலை எனும்மணப் பெண்ணின்
மணிக்கதிர்க் காதணி - வானம்
மேலைத் திசையில் களவாடி
மெல்ல மறைந்ததுவோ?
நீலப் புனலாற்றில் பொன்னின்
நிறங்கமழ் தங்கமீன் - இன்பக்
கோலப் புதுமையாய்க் குதித்து
கூத்திட்டு உலவிற்றோ ?
86