பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     மாணவர்க்கு

     நாளெல்லாம் இயங்குவதே
     நமது வேலை,
     நல்லாறாய் ஓயாமல்
     இயங்கும் வேலை.

     கோள்எல்லாம் அசைவனவே
     அமைதி இல்லை,
     கூறுகின்ற அமைதியென
     ஒன்றும் இல்லை.

     தோழர்களே, இரவென்னும்
     கதிர் அறுக்கும்
     துடிப்புடைய உழைப்பினரே,
     உலக வாழ்க்கை

     வாழல் எனும் இயக்கத்தால்
     அசைவால் உண்டாம்;
     மண்ணுலகு மாண்புலகம்
     இயக்கத்தாலே.

இ-6