இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மக்கள் எழுச்சி
விண்ணின் மீன்கள் பொலிவிழத்தல்
விடியலுக்கோர் அறிகுறி,
மண்ணின் மாட்சி தெரிக்க வானில்
கதிரவன் கீழ் எழுந்தனன்.
ஆழ்ந்த துன்ப ஊழி மாறி
அடடே, வேங்கைப் பாய்ச்சலாய்
வீழ்ந்த கிழக்கின் நரம்பினுடே
வெங்கனல்தீ பாய்ந்தது.
சீன நாடும் அரபு நாடும்
தெரிகிலாத ஒன்றுகாண்;
வானும் கடந்த ததுதான் மாந்த
வாழ்வின் குறிக்கோள் ஆகுமே.
* * * * *
நீ எழுப்பும் துகள் அனைத்தும்
நிறைந்த விண்மீண் ஆகுக.
வாழ்வெழுப்பி உலகினுக்கு
வழிவகுத்துச் செல்லுக.
மக்கள் கொண்ட எழுச்சி முலம்
உண்மை மண்ணில் தெரிந்தது,
ஒக்க இந்த உலகினுக்கே
உரிய காவல் நாமடா!
92