பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     மேற்கும் கிழக்கும்

     மேற்கில்
     அறிவுத் திறனே
     வாழ்க்கையின் ஊற்றாய் யிற்றாது உள்ளது.

     கிழக்கே, அன்புடைமையே,
     வாழ்க்கையின் அடிப்படை வளமாய் உள்ளது.

     அன்பின் வழியிலே அறிவு
     உண்மையை உணரும் வண்மை பெற்றிடும்.

     ஆகவே,
     விழிப்பீர், புத்துலகு காண விழைவீர்!

     அன்பொடும் அறிவு கலந்திட
     ஊக்கம் உந்த ஆக்கம் தேடுவீர்!

96