பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

முடியாது. அவை பல ஆயிரம் ஆண்டுகளாக நம்மை நாம் வளர்த்துக் கொண்ட வழிமுறைகள். இவற்றில் தீமைகள் இல்லை, நன்மைகள் மிகுதியாக இருக்கின்றன. அதனால் அவற்றைப் போற்றிக் காத்து வருகின்றோம். அது மட்டுமல்ல மனத்தை நல்லதன்கண் நிறுத்த அது மிகவும் தேவைப்படுகிறது.

நாம் பழைய வேத சாத்திரங்களின் சாராம்சங்களைப் பல வழிகளில் கேட்டு வருகிறோம். அதனால் நாம் இந்தக் கலாசாரத்தில் கட்டுப்பட்டு வாழ்கிறோம். அவற்றைத் தூக்கி எறிய முடியாது என்ற உணர்ச்சிதான் ஏற்படுகிறது. நம் நாட்டு வேத உபதேசங்களைக் கேட்க வழிபட ஒரு சிலர்மேல் நாடுகளில் இருந்து குழுமுவது நமக்கு வியப்பைத் தருகின்றது. நிறுவனங்கள் பல; பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை. இங்கே பல தேசத்து வெள்ளைக்காரர்கள் தியானம் வழிபாடு இந்த நியதிகளை மேற்கொள்வது வியப்பாக இருக்கிறது. அநேகமாக அவர்களும் மன உளைச்சலும் நிம்மதியும் இழந்தவர்களே. அவர்களுக்கு இந்த மோன நிலைகள் அமைதியைத் தருகின்றன. வேண்டிய பொருள் இருக்கிறது; அதனால் இப்படி இவர்கள் ஒதுங்கி வாழமுடிகிறது. நாம் மேல் நாட்டுத் தாக்கத்தால் பல வழிகளில் பாதிப்பு அடையும் போது அவர்கள் மட்டும் விதிவிலக்காக இருக்கவேண்டுமா என்ன? நம் சிந்தனைப் போக்குகள் வழிபாடுகள் ஒரு சிலரைப் பாதித்து உள்ளன. ஆனால் அவர்கள் வாழ்க்கை முறைகளும் சிந்தனைப் போக்குகளும் நம் தேசத்தையே பாதித்துள்ளன; நம் சிந்தனைகளையே மாற்றி உள்ளன. மனிதன் உரிமையோடும் மதிப்போடும் தன்னம்பிக்கை யோடும் செயல்படவேண்டும் என்பதும் பெண்ணும் ஆணும் சரிநிகர் சமமானவர்கள் என்ற உண்மையையும் அவர்களே அறிவுறுத்தி வருகின்றனர். இதைப் பற்றியும் குறிப்பிடவேண்டியுள்ளது. நாம் அவர்களோடு எவ்வாறு,