பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 09

யிலே தான் படுத்திருந்திருச்சு 1 என் பேரிலே அது கொண்டி நம்பிக்கையைக் கா த் து க் கி ட் டே ன். இப்போது என் வாக்கைக் காப்பாத்திட வேண்டிய ஒரு கடமையும் காத் திருக்குது! அதுக்கு உங்க தீர்ப்புத்தான் வேணும்! உங் களோட நல்வாக்கு எனக்கு -எங்களுக்கு கிடைச்சிட்டால், அப்புறம் இந்த லோகமே துச்சம்தான்!

உங்க மாதிரி எனக்கும் ஒரு வயசான தாய் இருக் கிறாங்க. அவங்க இந்தக் க ைத ைய க் கேட்டு என்னை மாதிரியே இளகுவாங்கன்னுதான் நம்புறேன்! மற்றவங்க எங்களை பத்தி என்ன நெனைச்சாலும், என்ன பேசினா லும் அதெல்லாம் ஒரு பொருட்டல்ல எங்களுக்கு தான் ஏமாந்ததாலே மனசொடிஞ்சு தற்கொலை முயற்சி எதை பும் கையாளாமல் இருந்திருச்சே ஊர்வசி, அதான் விதியின் விளையாட்டு! அம்மா, இனிமே நீங்கதான் தர்மம் சொல் லுங்க உங்க முடிவை! எங்க ரெண்டு பேர் வாழ்க்கையின் ஆரம்பமும் முடிவும் இனி உங்க வாக்கிலேதான் இருக்குங்க, அம்மா:

இதற்குமேல் அவனுக்குப் பேசத் திராணி இல்லை. தொண்டையை அடைத்தது.

சிறு குழந்தை போலத் தேம்பிய மூதாட்டி மீனாட்சி அம்மாள். “மாப்பிள்ளை ‘ என்று உணர்ச்சிச் செறிவுடன் புது உறவு சேர்த்து விளித்தாள்.

அமைதி பூத்துப் புன்னகை பூத்தாள் ஊர்வசி.

- அப்போது, அந்த வீட்டு வாசலை விட்டு டாட்ஜ் புறப் பட்டுக் கொண்டிருந்தது.