பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 || |

வந்தாள். இருந்தால் என்ன? ஆனாலும், என்னை நம் பினாள். தனக்கு ஒரு புகல் கிட்டுமென்று தவம் இருந்தவள் போல என்னைத் தேடி வந்தாள் அவள்.

அவள் முடிவு விதியின் சையிலோ, அல்லது, அவளைப் படைத்த ஆண்டவன் கையிலோ இல்லை நேற்று இரவுவரை’ என் கையில்தான் அவள் விதியும் அவள் வினையும் இருந் தன. கெட்டவனுக்குக் கெட்டவள்தான் சதம் என்னும் முடிவாக இந்நிலையை நான் ஏன் கருத வேண்டும்? ஆதர வற்ற நிலையில் அபலையாக வந்தாள் அவள்; உயிருக்குயி ராகக் கட்டிக் காத்த கற்பைப் பறிகொடுத்த பரிதவிப் புடன் வந்தாள். சாகத் தெரிந்தவள் அவள். ஆனாலும் சாவை விரும்பவில்லை. வாழ்வை விரும்பினாள் அதன் காரணமாக, அவள் என்னை நம்பினாள்; அடைக் கலமானாள்.

அவள் நடித்த முதல் நாடகத்திலே வழுக்கிவிழுந்த” அவளை ஏற்றுக் கொண்ட ஒர் எழுத்தாளரின் அந்தத் தர் மத்தை சிலாகித்துப் பேசிய என் தலைமைப் பேச்சை நம் பியே வந்தாள் என்னிடம், அந்த நம்பிக்கையைக் காப் பாற்றிக் கொண்டு விட்டேன். அந்த நம்பிக்கையைக் காப் பாற்றிக் கொடுத்து விட்டேன். பிறவியின் கடமையை உணர்ந்தாள் ஊர்வசி. எனக்கும் பிறவியின் கடன் புரியும்! அம்மா இம் முடிவை வாழ்த்துவார்கள்!

அபலைகளுக்கு ஆதர வ ளி க் கு ம் லட்சிய நோக்கம் கொண்டவர்கள் அம்மா, ஆவணியில் முகூர்த்தம் வைப்பதற்கென்று தனக்குப் பிடித்த மரு ம க ைள யும் நிர்னயம் .ெ சப்து இரு க் கி ற ார் க ள். அம்மா அந்தப் பெண்ணின் படத்தையும் எனக்கு அனுப்பியிருக் கிறார்கள். அநேகமாக, கூடிய விரைவில் புறப்பட்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான், வந்ததும், எனக்குப் பிடித்த மருமகளை அவர்களுக்கு அறிமுகப்