பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#63

அவன் மனக் கண்ணில் ஊர்வசியின் பூச்சூடிய கூந்தல் அழகு காட்டியது!

‘ஸ்ார்!’ என்ற புதிய குரல் கேட்டது. அறிமுகமில்லாத ஒருவரும், ஸ்திரி ஒருத்தியும் குழந்தை யோடு வந்து நின்றதைக் கண்டான் அம்பலத்தரசன். அவர்களுக்கு முகமன் மொழிந்தான். பாயை விரித்தான்.

‘நீங்க தானே மிஸ்டர் அம்பலத்தரசன்?”

“ஆமாங்க!”

உங்களைச் சும்மா பார்த் திட்டுப் போகத்தான் வந் தோம். என் பெயர் மகாலிங்கம், இவள் என் மனைவி. பெயர் மலர்விழி. இது எங்க குழ ந் ைத ஊர்வசிக்கு நேர்ந்த துர்ப்பாக்கியத்தைப் போல் இவளுக்கும் ஏற்பட்டு, இவள் என்னை அடைக்கலம் அடைஞ்சாள். இவளை ஏற்றுக்கிட்டேன். பெண்கள் அபலைகளாக ஆகும்போது, தங்களையும் மீறி இப்படிப்பட்ட துரதிர்ஷ்டங்களைச் சந் திக்க நேரிடும்போது, இதயமுள்ளவர்கள் நம்ம மாதிரி முன் வந்து அவங்களுக்குத் துணை நிற்க வேணு ம். இது தான் படைப்புச் சக்தி உலகத்துக்கு இட்டிருக்கக்கூடிய கட்டளை. உங்க தில்லெண்ணத்தை ஊர்வசி குடியிருக்கிற அடுத்த போர்ஷன்காரர் என்கிட்டே சொன்னார், அது தான் உங்களைப் பார்த்துப் போக வந்தோம்! “

‘உங்க அன்புக்கு மெத்த நன்றிங்க ஐயா!... உலகத் திலே நாம் அவதரிச்ச கடமைக்கு நம்மாலான கடமை களையும் எல்லா எதிர்ப்புக்களையும் சமாளிச்சு, எதிர் நீச்சல் போட்டுக்கிட்டு செய்கிறதுக்கு நாம் எப்பவும் ரெடியாய் இருக்கவேணும். நாம் பிறரை நேசிச்சால், நம்மைப் பக வான் நேசிப்பார் என்கிறதுதானே தத்துவம்? .

‘முக்காலும் உண்மைங்க. ‘ இருங்க, இதோ வருகிறேன்’ என்று சொல்லி பிளாஸ் குடன் புறப்பட்டு காப்பியுடன் மீண்டான் அம்பலத்தரசன்.