பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164


காப்பிக்கு நன்றி கிடைத்தது.

குழந்தை பொக்கை வாய்ப் புன்னகையை மீட்டியது. அதற்குக் காப்பியுடன், அன்புப்பாசம் நிரம்பிய முத்தமும் கிடைத்தது. ஆகவே, அது இரட்டிப்புப் புன்னகை சொரிந்தது.

‘இந்தத் தெய்வத்துக்குப் பெயர்..?’’ ‘: அங்கயற்கண்ணி.’’ என்றாள் மலர்விழி.

‘பேஷ்!. நல்ல பொருத்தம்!”

மிஸ்டர் அம்பலத்தரசன், உங்களுக்கு மேரேஜ் ஆனதும், ஒரு முறை நீங்க தம்பதி சமேதராக எங்க இல்லத்துக்கு விருந்துக்கு வரவேணும்.” என்று சொல்லித் தன் இருப்பிட முகவரி அச்சிடப்பட்ட கையடக்கமான அட்டை ஒன்றை நீ ட் டி னா ர் மகாலிங்கம். சொல்லிக் கொண்டு விடை பெற்றார்கள் அவர்கள். குழந்தை டாடா சொல்லி பூக் கைகளை அசைத்தது.

அம்பலத்தரசன் அறைக்குள் நுழைந்து அமரலானான்.

கீழே காரின் குழல் ஒலி கேட்டது. அம்பலத்தரசனுக்குப் புரிந்து விட்டது. அதோ, பூமிநாதன் வந்துவிட்டார்!’

அவன் ஊகம் நூற்றுக்கு நூறு சதவிகிதம் பலிதமடைந் திது, - -

வந்து விட்டான் பூமிநாதன். ஈவினிங் இன் பாரிஸ்’ வாசம் மூக்கைத் துளைத்தது. மார்னிங் இன் மண்ணடி,

என்று ஒரு புது வாசனைத் திரவியம் புழக்கத்தில் இருக்கக் கூடாதா ?

‘வாங்க பூமிநாதன்’ ஆமாம் என்று சொல்லியபடி பொன் நகை ஏந்தி