பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171


ஆலோசனைகளைக் கலக்கத்தான் உங்களைத் தேடி வந்தேன்’ என்று ஆரம்பித்தான் சீமான் பெற்ற செல்வ மான பூமிநாதன்.

“அப்படியா ரொம்ப வொண்டராக இருக்குது !

உங்களுக்கு நான் யோசனை கூறுவதா ? ம்....! சொல்லுங் களேன்” என்று அம்பலத்தரசன் அவனைத் தூண்டிக் கொண்டிருக்கையில், வரலாமா ?’ என்ற பெண்ணின்

நவீனக் குரல் கேட்டுத் தன் செவிகளைத் திருப்பினான் அம்பலத்தரசன். அவனுடைய முகம் மலர்ந்தது; மகிழ்ந்தது!

‘வா, ஊர்வசி என்று வரவேற்றான் அம்பலத்தரசன்.

(15)

திரு ஏற உரு ஏறித் திகழ்ந்த திருதிறைச் செல்வி யென வந்து நின்றாள் ஊர்வசி,

வா, ஊர்வசி!’ என்று மீண்டும் ஒரு தரம் வர வேற்புச் சொன்னான் அம்பலத்தரசன். தன்னை வியப்பு விரிய விழித்துப் பார்த்துக் கொண்டிருந்த பூமிநாதனைக் கடைக்கண்ணால் பார்த்தான் அவன்.

அவள் அந்தமுடன் மூரல் சிந்தி நடந்து வந்து நிலைப் படியில் நின்றாள். - . . . .

வாங்க ஊர்வசி என்றான் பூமிநாதன். அவளது இதழ்களின் துடிப்பு மிகுந்தது.

அசெளக்கியமாய் இருக்கீங்களா, வில்லன் லார்?” என்று கேட்டுக் கொண்டே, படர்ந்த சிரிப்பு பதறாமல் வினவினாள் ஊர்வசி, -

சநல்ல சுகம்தான்!” - பூமிநாதனின் வாய்ச் சொற்கள் தடுமாறின. . . %.