பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176


கூடத்திற்குள் அவசரமாக அடியெடுத்து வைத்து, அவசரத்தோடு பாயை எடுத்து உதறி விரித்தாள் ஊர்வசி; மேலாக்குச் சரித்து விழுந்து விடாமல் காத்துக் கொண் டாள். உட்காருங்க ரெண்டு பேரும்,’ என்று உபசாரம் செய்தாள். சொற்களில் பதட்டம் இருந்தது. கங்கள் கருமணிகளில் ஈரம் இருந்தது.

அம்பலத்தரசனும் பூமிநாதனும் பாயில் உட்கார்ந் தார்கள்.

அவர்கள் இருவரையும் பார்த்து, “ஒரு நிமிஷம் இருங்க இதோ வந்திடறேன்,’ என்று சொல்லிவிட்டு சமையற் கட்டுக்குச் சென்றாள்.

வினாடிகள் சிலவற்றை ஊமைக்கனவோடு விழுங்கியது மெளனம்.

“நீங்க இங்கே இதுக்கு முன்னாடி வந்திருக்கீங்களா ? என்று மெளனத்தை வெட்டினான் பூமிநாதன். வீசிக் கொண்டிருந்த வேப்பமரக் காற்றையும் மீறி அவன் முகத்தில் வேர்வை துளிர்த்தவாறு இருந்தது. துடைத்துக் கொள்ளச் சளைக்கவில்லை. அவன் கைகள்.

“என்னைக் கேட்கிறீர்களா ? நான் இரண்டொரு வாட்டி இங்கே வந்திருக்கேன், மிஸ்டர் பூமிநாதன் ! நீங்க ... ! என்று அவனும் பதிலுக்கு ஒரு கேள்வியைத் தொடுத்தான்.

‘நான் இங்கே வர்றது இதுவே முதல் தடவை. முந்தி ஒருதரம் இங்கே என்னை வரச் சொல்லி அழைச்சாங்க ஊர்வசி. எனக்கு ஒழியலே. ஊர்வசிக்கு என் பேரிலே எப்பவும் ஒரு அன்பு அது பேரிலே எனக்கும் எப்போதுமே அன்பு உண்டு !’ என்று விளக்கினான் பூமிநாதன், காற்றை வேண்டித் தன்னுடைய சில்க் சட்டைப் பொத் தான்களைக் கழற்றி, சட்டையைத் தளர்த்தி விட்டபோது