பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഉണ്ണ {് ഖl f [1]

அழகு, தவக்கோலம் பூண்டிருந்தவேளை அது !

தன்னை மறந்த லயத்தின் கட்டுப்பாட்டுணர்வுடன் விமரிசனத்தின் எழுத்துக்களை உருவாக்கிக் கொண்டே யிருந்த அம்பலத்தரசன், எழுதி முடித்த தாள்களின் வரிசையில் மேலும்ஒருதாளை எழுதி முடித்து இனைத்து விட்டுத் தலையை நிமிர்த்திய போது, அவனிடமிருந்து ஆழ்ந்த பெருமூச் சொன்று வெளிப்பட்டது. நெஞ்சில் எழுந்த சலனத்தைச் செம்மைப்படுத்த முடியாமல் தவித்த அப்பெரு மூச்சுக்கு இதம் அளிக்கும் வகையில், அவன் புதிய உணர்வின் தெம்போடு அடுத்த சிகரெட்டைப் பற்றவைத்துப் புகையை இனம்புரியாத வெறியுடன் ஒரே மூச்சாக இழுத்துக் கலக்கினான்.

உள்ளடங்கிப்போன புகைச்சலின் விளைவாக, புகைச்சல் இருமல் வெளிப்பட்டது; இரண்டு மூன்று தரம் இருமினான். ஏற்கெனவே கலங்கிவிட்டிருந்த கண்கள் இப்போது இருமலின் காரணமாக மேலும் கலங்கின. விழி மு ைன களி ல் முத் து க் கே த் தி ரு ந் த து. உள்ளத்தின் படப்படப்பும், உடலின் ஆற்றாமையும் இன்னமும் அப்படியேதான் இருந்தன. மேஜை மீது அவன் பார்வை ஊர்ந்தது. எழுதப்பட்டிருந்த தாள்களின் அருகில் லோட்டா இருந்தது. லோட்டாவில் தண்ணிர் மிச்சம் இருந்தது. பத்துப் பதினைந்து நிமிஷங்களுக்குள்ளாக எத்தனை மிடறு தண்ணிர் குடித்துவிட்டான் அவன் !