பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

‘வாழ்ந்து காட்டுவதற்குத்தான் வாழ்க்கை! அப்படின்னு ஒரு அழகான -உண்மையான-இயல்பான ஒரு வசனத்தை எனக்கு நாடகத்தின், தொடக்கத்திலே நிழல் தந்த நல்லவர் ஒருவர் பேசினாருங்களே,உங்களுக்கு நினைப்பிருக்குமே! அந்த மாதிரியேதான், இப்போது என் மனசும் முடிவு செஞ் சிருக்குது. வாழ்க்கை என்கிறது வாழ்ந்து காட்டக்கூடிய ஒரு கடமை, ஒரு சந்தர்ப்பம், ஒரு பயன் என்கிறதை எனக்கு நானே செய்து காட்ட செய்து பார்க்கப் போகிறேன்! இந்த ஒரு சோதனைக்கு நீங்கதான் புகல் தரவேணும் உங்களால் தான் எனக்கு அடைக்கலம் தரவும் இயலும், அம்மாதிரி யான ஒரு பக்குவமும் பரிவும் பாசமும் கடமையும் உங்களு டைய மனத்துக்குத்தான் உண்டு! உங்களுடைய மனிதாபி மானத்துக்குத்தான் உண்டு!... உங்களுடைய மனிதத் தன் மைக்குத்தான் உண்டு! "

உணர்வுகளின் செறிவு துலங்க உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாள் ஊர்வசி, மூச்சு வாங்கியது.

அப்போதைக்கு அவள் பேச்சு முடியட்டுமென்று காத் திருந்தாற்போல, டெலிபோன் மறுமுறையும் கூப்பாடு போட்டது.

சலனத்தின் உச்சத்திற்குக் கொணர்ந்து நிறுத்தப்பட்ட அம்பலத்தரசன், புதிய சிகரெட் பெட்டியைப் பிரித்து ஒரு சிகரெட்டை எடுத்துக்கொண்டு எடுத்த சிகரெட்டைப் பற்ற வைக்க வேண்டுமென்னும் நினைவற்று, தொலைபேசியை நெருங்கினான்.

‘பூ’ அலுவலகத்தினின்று வந்த நினைவூட்டல் குரல் அது.

அவன் திரும்பினான். "என்னைத் தயவுசெஞ்சு மன்னிச் சிடுங்க. வந்த உங்களை உட்காரச் சொல்லக்கூட ஞாபக