பக்கம்:இசைத்தமிழ்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 பாடுதல் வேண்டும் எனவும், அங்ங்ணம் பாடிப்போற்றுவார் முன்னைத் தீவினையாகிய பாவம் நீங்க இறைவன் திருவரு ளால் எல்லா நலங்களையும் பெற்று இன்புறுவர் எனவும் வற்புறுத்துதல் காணலாம். நன்ருக இசை பாடுதற்கேற்ற குரல்வளம் அமையாதவர்களாயினும் இத்திருப்பதிகங்களைக் கூடிய அளவு இசைநலம் பொருந்தப்பாடி மகிழவேண்டும் என்பதே இசைத் தமிழிலக்கியங்களாக இவற்றைத் திரு வாய் மலர்ந்தருளிய பெருமக்களது அருட்குறிப்பாகும். "தழங்கெரி மூன் ருேம்புதொழில் தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல் வழங்கும் இசை கூடும்வகை பாடுமவர் நீடுலகம் ஆள்வர்தாமே 11-131-11) எனவரும் திருக்கடைக்காப்பு இங்கு நோக்கத்தக்கதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/153&oldid=745004" இலிருந்து மீள்விக்கப்பட்டது