பக்கம்:இசைத்தமிழ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தாக்கு என்னும் எண்வகைத் தொழிலிலுைம் பண்ணி யமைத்த பண்ணுனது மேற்குறித்த ஒன்பது இலக்கணத் தாலும் உணர்தற்பாலதென்பது நன்கு புலம்ை. எட்டிருங் கலை என்பன யாழ்க்கருவியிலே இசை எழுப்புதற்குச் செய்யும் பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்னும் எட்டினையும், இசை நிலையின் தீதின்மை ஆராய்தற்குச் செய்யும் வார்தல், வடித்தல் உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்னும் எட்டினேயும் ஒருங்கே குறிக்கும் எனக்கொள்வர் யாழ் நூலாசிரியர். பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று' என்ருர் பரிமேலழகர். ஈரிரு பண்ணும் எழுமூன்று திறனும் என்பது பிங்கலந்தை. பாலே, குறிஞ்சி, மருதம், செவ்வழி இவை நான்கும் பெரும்பண்கள். நாற்பெரும் பண்ணுக்கும் இருபத்தொரு திறங்கள் கூறப்பட்டன. பாலையாழ்ததிறன் 5, குறிஞ்சியாழ்த்திறன் 8, மருதயாழ்த்திறன் 4, செவ்வழி யாழ்த்திறன் 4 ஆக 21. இவ்விருபத்தொன்றும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என வகைக்கு நான்காய் எண்பத்துநான்காகும். இசைச் சுரங்களின் மாத்திரை வேறு பாட்டினலே முற்குறித்த ஒவ்வொரு பண்ணும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என நால்வகைச் சாதி யாயின என்ற நுட்பத்தை யாழ் நூலிற் காணலாம். இங்குச் சுட்டிய பழந்தமிழ்ப் பண்கள் நூற்றுமுன்றின் அமைப்பினையும் வகைமுறைமையினையும் யாழ்நூல் பண்ணி யல்' என்ற பகுதியில் அருண்மிகு விபுலாநந்த அடிகளார், சிலப்பதிகாரவுரை, பிங்கலந்தை முதலிய பழந்தமிழ் நூல் களின் சான்றுகாட்டிப் பின்வருமாறு வகைப்படுத்தி விளக்கி யுள்ளார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/49&oldid=745101" இலிருந்து மீள்விக்கப்பட்டது