பக்கம்:இசைத்தமிழ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 சுரங்களால் ஆகியவற்றைத் திறத்திறம் என்றும் வழங்குதல் ខេប இவற்றை முறையே சம்பூரணம், ஷாடவம், ஒளடவம், சதுர்த்தம் என வடமொழிப் பெயரால் வழங்கு தலும் உண்டு. திறம் என்ற சொல் பெரும்பண் நீங்கலாக ஏனைய பண்ணியற்றிறம் திறம், திறத்திறம் என்னும் முத் திறங்களையும் குறிக்கும் பெயராகும். நூற்றுமூன்று பண் கள் என்புழி மேற்குறித்த பண்ணுந் திறமும் ஆகிய எல்லா வற்றையும் பண்” என்ற பெயரால் வழங்கும் வழக்க முண்மை இனிது புலளும். ஓர் இராகத்திற்குரிய ஏழு இசைச்சுரங்களில் ஒவ் வொரு சுரத்தையும் கிழமையாக (சீவகரமாக)க் கொண்டு மெலிவு, சமன், வலிவு என்னும் மூவகைத் தானங்களிலும் பாடுமிடத்து, அவ்விராகம் மூவேழ் துறைகளாக (இருபத் தொரு திறங்களாக). விரிவு பெறும். இவ்வாறு பண்டை இசைத் தமிழ் வல்லோர் ஒரே பண்ணினை இருபத்தொரு துறைகளாக விரிவுபடுத்திப் பாடியுள்ளார்கள். புறநானூற்றில் 152-ஆம் பாடல் வல்வில் ஒரியை வன்பரணர் பாடிய தாகும், அதன்கண், 'மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி’ என்ற தொடர் அமைந்துள்ளது, இதற்கு இருபத்தொரு பாடற்றுறையும் முறையாற்பாடி முடித்து' எனப் பொருள் வரைந்த பழைய உரையாசிரியர், 'மூவேழ் துறைகளையும் என்றது, வலிவு, மெலிவு, சமம் என்னும் மூன்று தானத் திலும் ஒவ்வொன்றில் ஏழு தானம் முடித்துப்பாடும் பாடற் றுறையை" என விளக்கமும் எழுதியுள்ளார். இங்ங்ணம் ஏழு சுரங்கள் நிறைவு பெற்றுள்ள பேரும் பண்களுள் ஒன்றினை மெலிவு, சமன், வலிவு என்னும் மூன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/54&oldid=745107" இலிருந்து மீள்விக்கப்பட்டது