பக்கம்:இசைத்தமிழ்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தாகும். வாரமென்னுஞ் சொல்லுக்கு இசையியக்கம் நான்கி னுள் ஒன்று என்னும் பொதுப்பொருளும் தெய்வப் பாடல் என்ற சிறப்புப் பொருளும் உரியனவாதலின், அப் பொது நீக்கித் தெய்வப்பாடல் என்ற சிறப்புப் பொருளையே அச் சொல் தருதல் வேண்டிப் பிற்காலத்தார் அதனைத் தேவாரம் எனச் சிறப்புடையடைமொழியுடன் சேர்த்து வழங்குவாரா யினர். இன்னிசையால் இறைவனைப் பாடிப் போற்று தலையே பண்டைத் தமிழர் சிறப்புடைக் கடவுள் வழிபாடா கக் கைக்கொண்டொழுகினர். அதனல் தெய்வ இசைப் பாட்டினைக் குறித்த தேவாரம் என்னுஞ்சொல் இறைவனை உளமுருகிப் போற்றும் வழிபாட்டினையும் குறிப்பதாயிற்று. முதல் இராசராச சோழன் கங்கைகொண்டசோழன் முதலிய சோழமன்னர்கள், முவர்.முதலிகள் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்களைக் காதலாகி ஒதி எல்லாம்வல்ல சிவபெருமானை வழிபடும் பதிகப் பெருவழியில் ஒழுகியவ ராவர். அன்னேர் தாம் வழிபடுதற்கென அமைத்துக் கொண்ட இறைவன் திருவுருவினைத் தேவாரதேவர் எனவும் திருப்பதிகம் ஓதி வழிபாடு செய்தற்குரிய பூசையிடத்தினைத் தேவாரத்துச் சுற்றுக்கல்லூரியெனவும், தாம் செய்யும் இறை வழிபாட்டிற்குச் சாதனமாக முவர் திருப்பதிகங்களையும் இசையுடன் பாடி உள்ளத்திற்கு அமைதியுண்டிாக இசைத் தொண்டு செய்பவரைத் தேவாரநாயகம் எனவும் கல் வெட்டுக்களிற் குறித்து வழங்கியுள்ளனர். இவ்வாறு கல் வெட்டுக்களில் தேவாரம் எனக் குறிக்கப்படும் வழிபாட் டிற்கும் தெய்வப்பாடல்களாகிய மூவர் திருப்பதிகங்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு எனலாம். "நம் தேவாரத்துத் திருப்பதியம் பாடும் பெரியான் மறைதேடும் பொருளான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/71&oldid=745126" இலிருந்து மீள்விக்கப்பட்டது