பக்கம்:இசைத்தமிழ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 என்பதும், பண்டைத் தமிழியல் நூலாகிய தொல்காப்பியச் செய்யுளியலிற் கூறப்பட்ட யாப்பியல் மரபே தேவாரத் திருப்பதிகங்களுக்கு மிகவும் ஏற்புடையதென்பதும் முன்னைச் சான்ருேர் பலரது துணியாகும். ஆசிரியர் தொல்காப்பியனுர், தொல்காப்பியச் செய் யுளியலின் கண்ணே ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலிப்பா எனப் பாக்கள் நான்கென்றும், அந்நால்வகைச் செய்யுட் களும் அறம், பொருள், இன்பம் என்னும் மும்முதற் பொருள் களேயும் கருவாகக்கொண்டு பாடப்பெறுவன என்றும் கூறிஞர். நால்வகைப் பாக்களுள் ஒன்ருகிய கலிப்பாவினை ஒத்தாழிசைக்கலி, கலிவெண்பாட்டு, கொச்சகக்கலி, உறழ் கலியென நான்காகப் பகுத்தார். அந்நால்வகையுள் ஒன்ரு கிய ஒத்தாழிசைக்கலியை அம்போதரங்கம் எனவும் தேவர்ப்பராயது எனவும் இருவகையாக்கி, தேவர்ப்பராய தனை வண்ணகம் எனவும் ஒருபோகு எனவும் இரண்டாக்கி, அவ்விரண்டனுள் ஒருபோகினைக் கொச்சக ஒருபோகு எனவும் அம்போதரங்க ஒருபோகு எனவும் இருவகையாகப் பகுத்து விளக்கியுள்ளார். தொல்காப்பியச் செய்யுளியலில்,

  • தரவின் ருகித் தாழிசை பெற்றும்

தாழிசை யின்றித் தரவுடைத் தாகியும் எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியும் அடக்கிய லின்றி படிநிமிர்ந் தொழுகியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை புடையது கொச்சக ஒருபே காகும் என்ப" (செய்யுளியல்-149) எனவரும் நூற்பாவில் கொச்ச ஒருபோகின் இலக்கணம் விரித்துரைக்கப்பெற்றது. 'கலிப்பாவுக்கு உரிய தரவு முதலாயின உறுப்புக்களில் தரவு இன்றித் தாழிசை பெற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/78&oldid=745133" இலிருந்து மீள்விக்கப்பட்டது