பக்கம்:இசைத்தமிழ்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8t யுடன் பாடும் அளவிலன்றி நாடக மகளிர் ஆடரங்குகளிற் பாடியாடுதற்கேற்ற பொருள் பொதிந்த தாளச் சொற் கட்டுகளாக அமைந்திருத்தல் அறிந்து மகிழத்தக்கதாகும். இயலிசைத் தமிழாகிய தேவாரத் திருமுறைகளில் ஒவ்வொரு பண்ணிலும் அமைந்த திருப்பதிகங்களின் யாப்பு வகையினைக் கட்டளை என வழங்குதல் மரபு. கட்டளை என்பது, மாத்திரை யளவும் எழுத்தியல் நிலையும் பற்றிச் செய்யுட்களில் அமைந்த ஒசைக் கூறுபாடாகும். சிலப்பதி காரம் அரங்கேற்று காதை உரையில் ஆடல் பாடல் இசையே தமிழே எனவரும் தொடர்க்குப் பொருள் கூறு மிடத்து, தமிழ் என்பதற்கு வடவெழுத்தொரீ இவந்த எழுத்தாலே கட்டப்பட்ட ஒசைக் கட்டளைக் கூறுபாடுகளும்’ என அரும்பதவுரையாசிரியர் விளக்கவுரை கூறுவர். இதனைக் கூர்ந்து நோக்குங்கால் இசைத் தமிழில் வழங்கும் கட்டளை என்ற சொல், செய்யுட்களில் அமைந்த ஒசைக்கூறுபாட்டி னையே குறிப்பதென்பது நன்கு துணியப்படும். ஒசை வகை யாகிய இக்கட்டளை யமைப்பினை அடியொற்றியே இசைப் பாடல்களின் தாளம் முதலிய பண்ணிர்மை அமைதல் இயல்பு, இந்நுட்பம் கட்டளைய கீதக் குறிப்பும்" என வரும் பழம் பாடற்ருெடரால் நன்கு புலனுதல் காண்க, ஆசிரியர் தொல்காப்பியனர், பாக்களிற் பயிலும் அடிகளை அவற்றில் அமைந்த சீர்வகை பற்றியும், எழுத் 1. வட்டணயுந் தூசியு மண்டலமும் பண்ணமைய எட்டுடன் ஈரிரண் டாண் டெய்திய பின்-கட்டளைய கீதக் குறிப்பும் அலங்காரமுங் கிளரச் சோதித் தரங்கேறச் சூழ். (சிலப்-அரங்கேற்று-அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/88&oldid=745144" இலிருந்து மீள்விக்கப்பட்டது