பக்கம்:இசையமுது 1, 1984.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சுண்ணாம்பிடிக்கும் பெண்கள் மந்தையின் மாடு திரும்பையிலே - அவள் மாமன் வரும் அந்தி நேரத்திலே குந்தி இருந்தவள் வீடு சென்றாள்-அவள் கூட இருந்தாரையும் மறந்தாள்! தொந்தி மறைந்திட வேட்டி கட்டி-அவன் தூக்கி வந்தானொரு வெல்லக்கட்டி இந்தா எனக்கொடுத் திட்டாண்டி-அவன் எட்டி ஒரே முத்தம் இட்டாண்டி! இசையமுது கட்டி வெல்லத்தைக் கசக்கு தென்றாள்--அவன் கட்டாணி முத்தம் இனிக்கு தென்றாள் தொட்டியின் நீரில் குளிக்கச் சொன்னாள்—அவன் தோளை அவள்ஓடித் தேய்த்து நின்றாள்! "கொட்டிய நீரில் குளிர்ச்சி உண்டோ-இந்தக் கோடை படுத்திடும் நாளில்?" என்றாள் "தொட்டியின் தண்ணீர் கொதிக்கு" தென்றான்-"நீ தொட்ட இடத்தில் சிலிர்க்கு" தென்றான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/17&oldid=1443333" இலிருந்து மீள்விக்கப்பட்டது