பக்கம்:இசையமுது 1, 1984.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் பகுதி இன்பம் பசி என்று வந்தால் ஒருபிடி சோறு புசி என்று தந்துபார் அப்பா! பசி என்று வந்தால்... பசையற்ற உன்நெஞ்சில் இன்பம் உண்டாகும் பாருக் குழைப்பதே மேலான போகம்! பசி என்று வந்தால்... அறத்தால் வருவதே இன்பம்-அப்பா, அதுவலால் பிறவெலாம் துன்பம்! திறத்தால் அறிந்திடுக அறம்இன்ன தென்று செப்புநூல் அந்தந்த நாளுக்கு நன்று! பசி என்று வந்தால்... மனுவின்மொழி அறமான தொருநாள் - அதை மாற்று நாளே தமிழர் திருநாள்! சினம், அவா, சாதி, மதம் புலைநாறும் யாகம் தீர்ப்பதே இந்நாளில் நல்லறம் ஆகும்! பசி என்று வந்தால்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/19&oldid=1443331" இலிருந்து மீள்விக்கப்பட்டது