பக்கம்:இசையமுது 1, 1984.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் பகுதி பூனை பூனை வந்தது பூனை! இனிப் போனது தயிர்ப் பானை! தேனின் கிண்ணத்தை துடைக்கும் - நெய்யைப் திருடி உண்டபின் நக்குந்தன் கையைப் பூனை வந்தது! பட்டப் பகல்தான் இருட்டும்.-அது பானை சட்டியை உருட்டும்!! சிட்டுக் குருவியும் கோழியும் இன்னும் சின்ன உயிரையும் வஞ்சித்துத் தின்னும் பூனை வந்தது! எலிகொல்லப் பூனை தோது,-மெய்தான் எங்கள் வீட்டில் எலி ஏது? தலைதெரியாத குப்பை இருட்டறை தன்னிலன்றோ எலிக்குண்டு திருட்டறை பூனை வந்தது! 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/32&oldid=1446155" இலிருந்து மீள்விக்கப்பட்டது