பக்கம்:இசையமுது 1, 1984.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் பகுதி தமிழ் வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே மாண்புகள் நீயே என்தமிழ்த் தாயே வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே வீரனின் வீரமும் வெற்றியும் நீயே! தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப் பேனோ தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய் தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ! செந்தமிழே! உயிரே! நறுந் தேனே செயலினை மூச்சினை உனக்களித் தேனே! நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே! முந்திய நாளினில் அறிவும் இலாது மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது செந்தாமரைக் காடு பூத்தது போல செழித்தஎன் தமிழே ஒளியே வாழி ! இசையமுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/35&oldid=1446153" இலிருந்து மீள்விக்கப்பட்டது