பக்கம்:இசையமுது 1, 1984.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 எழுச்சி தமிழனே இது கேளாய்-உன் பால் சாற்ற நிளைத்தேன் பல நாளாய். கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு! நமையெல்லாம் வடமொழி தூக்கிடும் தாம்பு நம் உரிமைதனைக் கடித்ததப் பாம்பு தமிழனே இது கேளாய்.. இசையமுது தனித்தியங் கும் தன்மை தமிழினுக் குண்டு தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு தமிழனே இது கேளாய்... வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார் வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார் நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார் நாமுணர்ந்தோம்; இந்நாள் அவரஞ்சி விழித்தார் தமிழனே இது கேளாய்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/39&oldid=1443352" இலிருந்து மீள்விக்கப்பட்டது