பக்கம்:இசையமுது 1, 1984.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் பகுதி உலகின் நோக்கம் வகை உவகை உலகத்தாயின் கூத்து!- வந்து குவியுதடா நெஞ்சில் உவகை உவகை... எவையும் தன்னுள் ஆக்கிய பெருவெளி எங்கும் அடடே தாயின் பேரொளி உவகை உவகை... அவிழும் கூந்தல் வானக் கருமுகிலாய்--இடையினின் றலையும் பூந்துகில் பெருவெளி எங்கும் போம் தவழப் புதுநகை மின்னித் துலங்கும் தாய் நின்றாடிய அடிமுடி முழங்கும் உவகை உவகை... தொடுநீள் வானப்பெருவில் ஒருகையில் - பெரும்புறம் தூளாகிடவரு கதிர்வேல் ஒருகையில் அடுநீள் விழியிற் கனலைப் பெருக்கி ஆடும் திறல்கண் டோடும் பகைதான் உவகை உவகை... 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/44&oldid=1443347" இலிருந்து மீள்விக்கப்பட்டது