பக்கம்:இசையமுது 1, 1984.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் பகுதி அன்றும் இன்றும் பண்டு தமிழ்ச் சங்கத்தை உண்டு பண்ணிய மன்னன் சீரெல்லாம், விண்டு புகழ்ந்து பாடி இன்னும் வியக்கின்றார் இப் பாரெல்லாம்! அண்டும் புலவர்க் கெல்லாம் அந்நாள் மன்னர் கொடுத்த கொடைதானே தண்டமிழ் இந்நாள் மட்டும் சாகாமைக்கே அடிப்படை மானே! புலவர் நினைப்பை யெல்லாம் பொன் னெழுத்தால் பதித்து நூலாக்கி, நலம் செய்தா ரடி மானே நம் தமிழ்வேந்தர் நம்மை மேலாக்கி! இலை என்ற புலவர்க்கோ எடையின்றிப் பொன் தந்தார் மூவேந்தர், களை தந்தார் நமக் கெல்லாம் அதானல் இன்றைக்கு நாம் தமிழ் மாந்தர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/48&oldid=1443359" இலிருந்து மீள்விக்கப்பட்டது