பக்கம்:இசையமுது 1, 1984.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் பருதி பெண் கல்வி பெண்களால் முன்னேறக் கூடும்- நம் வண்தமிழ் நாடும் எந் நாடும்! கண்களால் வழிகாண முடிவதைப் போலே! கால்களால் முன்னேற முடிவதைப் போலே! பெண்களால் முன்னேறக் கூடும்! படியாத பெண்ணினால் தீமை!- என்ன பயன்விளைப் பாளந்த ஊமை? நெடுந்தமிழ் நாடெனும் செல்வி- நல்ல நிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி பெண்களால் முன்னேறக் கூடும்! பெற்றநல் தந்தைதாய் மாரே,- நும் பெண்களைக் கற்கவைப் பீரே! இற்றைநாள் பெண் கல்வி யாலே.-முன் னேறவேண் டும்வைய மேலே! பெண்களால் முன்னேறக் கூடும்! 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/50&oldid=1443361" இலிருந்து மீள்விக்கப்பட்டது