பக்கம்:இசையமுது 2, 1952.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 யார் இவள் (வண்ணம்) இசையமுது ஸ்ரீமதி இவ ளார்? உலகிடை மானிடமதி லேதிவள்? ஒரு சேலிணையினை மேரிருவிழி, கோகனகவி நோதஅதரம், மாமதிரிகர் ஓரிளமுகம். வானுறுமழை தானிருள் குழல். வாழ்மதுகரம் ஊதிடுமலர் சூடியமுடி யோடிவளிரு மத்தக மொத்த னத்தொடு சித்தமி னித்திட நிற்பது மிக்கவும் அற்புதம்! மலர்வாய் திறந்தொரு வார்த்தை சொல்லாளோ? தோய்மதுமலர் மாலையைநிகர் ஆகியாரு தேகவனிதை தீவிரநடம் ஆடியமயி லேஎனுமொரு சாயனினொடு மாசறுகலைமானெனமருள் வாளவள்கடையோ அனநடை வாழுலகினி லே இவளரு ளாலதிசுக மேபெருகிடும் ! வைத்திடு புத்தமு தத்தையெடுக்கம றுத்திடல் மெத்தவ ருத்தமெ னக்குறும்! மதுவோடையை மொண்டுண வாக்கு நல்காளோ? மாமயலெனும் ஓர் அனவிடையே எனதுளம் [நோயடைவதை மாதிவளறி யாள் இதைளவர் போயவளிடமே புகலுவர்? ஆம். அவள் தரு வாயிதழமுதே இதுததி மா அவுஷதம்! ஆவியுமவளே உடைமைக ளாதியுமவ ளேயுலகினில்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/21&oldid=1499406" இலிருந்து மீள்விக்கப்பட்டது