பக்கம்:இசையமுது 2, 1952.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி தமிழ்த் தொண்டு

தமிழ்என்னும் மணிவிளக் கேற்றடா நாட்டில் தமிழரின் நெஞ்சமாம் அழகான வீட்டில்! அமுதென்று கொள்ளடா செந்தமிழ்ப் பணியை அறமென்று கொள்ளடா செந்தமிழ்ப் பணியை (த)
தமிழ்என்ற உணவினைக் குளியடா யார்க்கும் தமிழருக் கிங்குள்ள குறையெலாம் தீர்க்கும் சமமாக ஆற்றடா தமிழூழியத்தைச்
சகலர்க்கும் ஆற்றடா தமிழூழியத்தை.
(த)
தமிழென்ற வன்மையைக் கூட்டடா தோளில் தமிழர்க்கு நலமெலாம்வரும் ஒரே நாளில் அமைவினால் புரியடா செந்தமிழ்த் தொண்டை அன்பினால் புரியடா செந்தமிழ்த் தொண்டு. (த)
தமிழ்என்னும் உணர்வினைச் சேரடா எங்கும் தமிழரின் ஆட்சியே உலகெலாம் தங்கும்
இமையேனும் ஓயாது தமிழுக் குழைப்பாய் இன்பமே அதுவென்று தமிழுக் குழைப்பாய் (த)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/33&oldid=1500213" இலிருந்து மீள்விக்கப்பட்டது