பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—3—

அவர்களைப் பிடித்து மக்கள் தொங்கிக் கொண்டிருக்கும் படி செய்து கொண்டிருக்கிறார்கள், பார்ப்பனர்கள்.

இராசீவின் மறைவும், பார்ப்பனீயப்
பதற்ற ஆரவாரங்களும்!

நாம் எதிர்பார்த்தவாறு, இராசீவின் முடிவு அவர் அன்னையைப் போலவே கொடும் அவலத்தில் முடிந்தது. உயிர் போவது வேறு; அதைப் பிறர் போக்குவது என்பது வேறு. தாய்க்கும் பிள்ளைக்கும் அவர்களின் உடல்களைச் சிதைத்து உயிர் வெளியேற்றப்பட்டது. வழக்கம் போல் சிதைந்த உடலைத் தூக்கி வைத்துக் கொண்டு, 'புனித' நாடகம் போட்டு, நாட்டு மக்களிடத்திலும், உலக நாடுகளிடத்திலும் பெருத்த ஆரவார விளம்பரத்தையும், இரக்கத்தையும், கட்டியங்கூறிப் 'புண்ணிய' வரலாறு எழுதிவிட்டனர், ஆரியப் பார்ப்பனர்.

தேசியப் பொருளியல் மதிப்பை அறியாமல், வழக்கம் போல் அவர் அன்னைக்குச் செய்தவாறு இலக்கம் இலக்கமாக மக்களின் வரிப்பணத்தைச் செலவிட்டு, அவரின் சிதைவுற்ற உடலுக்குப் 'புனித' நீராட்டு, சந்தன நெய் எரியூட்டு, சாம்பல் ஊர்வலம், 'புனித' ஆற்றுநீர்க் கரைசல், பனிமலைத் தெளிப்பு முதலிய மதச் சடங்குகளுடன், அரிய பெரிய உலகத் தலைமைக்கு உயர்த்திப் பாடித் தெள்ளேனம் கொட்டிவிட்டனர், அவரின் பின்பற்றிகளும், அரசியல் ஊதிய அதிகாரிகளும், குடும்பத்தினரும்! பார்ப்பான் இறந்தால், அவனைத் தேவனாக்கித் தெய்வம் ஆக்கி ஊர்ப் பணத்தை உலா வரத் தாராளமாகச் செலவழித்து, நெருப்பிலும் நீரிலும் கொட்டி விடுகின்றனர், பூணூல் திருமேனிகள். கேட்பதற்குப் புலனறியா வாயில்லாப் பூச்சிகளான இந்திய நாட்டுப் பேதை மக்களிடம், இராசீவ் போன்ற அரசியல் குற்றவாளிகளையும் (Political culprit) பொருளியல் எத்தர்களையும், ஏய்ப்பர்களையும்(Economical Fraud), குமுகாயப்