பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 14 —

மாந்தரிலும் தீயவர்கள், கொடுமையானவர்கள், முட்செடிகள், புதர்கள், புற்கள் போல் மளமளவென்று வளர்ச்சி பெறுவார்கள். மற்றவர்களை வளர விடாமல் தாமே வளர்ந்து நிற்பார்கள்.

இராசீவும் அவருடைய அன்னையும் முள்மரமும், முட்புதரும், புற்களையும் போன்றவர்களே! அவர்கள் தாமாகவே, காலம் வந்து மடிவதில்லை . அழிக்கப்பட வேண்டிய தீமைகள் போல், இவர்களும் அழிக்கப்பட்டுத் தான் மடிகிறார்கள். இஃது இயற்கையும் வரலாறும் ஆகும்.

இந்திராவும் இராசீவும் தமிழின அழிப்பாளர்கள் !

இந்திராவாலும், இராசீவாலும் தமிழினம் அழிந்தது போல் வேறு எந்த அரசியல் தலைவராலும் அழிபட வில்லை. அதுவும் இவர்கள் திட்டமிட்டே தமிழினத்தை அழித்தொழிக்க முற்பட்டார்கள். அதன் வளர்ச்சியைத் தடுத்தார்கள். தமிழகத்திலும் சரி, தமிழீழத்திலும் சரி, இவர்களால் தமிழினம் அழிக்கப்பட்டே வந்தது. பார்ப்பனர்களே இவர்களால் பெரிதும் வளர்ச்சி பெற்றார்கள். பார்ப்பனீயம் இவர்களால் மிகவும் தழைத்தோங்கி வலுப்பெற்று வந்தது. இதில் யாரும் கருத்து வேறுபாடு கொள்ளவோ, காட்டவோ முடியாது. பொத்தாம் பொதுவில், இவர்கள் நாட்டுக்கு நல்லது செய்தார்கள் என்று, இவர்களால் பெரிதும் நன்மைகள் பெற்ற பார்ப்பனர்களும், முதலாளிகளும், நம் இனத்து இரண்டகர்களும், வஞ்சகர்களும், காட்டிக்கொடுப்பான்களும் கூறுவார்களே யொழிய, வேறு தனித் தேசிய இனத்தவர்கள் எவரும் கூற முன்வர மாட்டார்கள். மொத்தத்தில், இவ்விரு தலைவர்களாலும், தமிழினத்தவர்கள், பஞ்சாபி இனத்தவர்கள், அசாமியர், காசுமீரிகள், நாகாலாந்தியர், மிசோராமியர், வங்காளியர் போன்ற தேசிய இனத்தவர்கள் பெரிதும் வலுக்குன்றினர். நேரு காலத்தில் பார்ப்பனீய வளர்ச்சிக்கும், பிற தேசிய இனங்களின் தளர்ச்சிக்கும்