பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இட்ட சாவம் முட்டுக!

முண்டையின் மகனே! முண்டையின் மகனே!
கொண்டையில் லாத ஒழுகிய முழக்குழல்
கூர்த்த கலுழன் வெவ்வாய் மூக்கின்
ஆர்த்த செருக்கோ டாண்மையின் தோற்றத்து
நாவலந் தீவின் நாயகி யென்ன
மேவலந் திரிந்த அரசியல் மேனகை—
ஆரியக் கௌடிலி — இந்திரா என்னும்
பூரியை பிதுக்கிய முண்டையின் மகனே!

சிங்களக் கொலைஞன் செயவர்த் தனன்எனும்
வெங்கணன் விரித்த வலையினில் விழுந்து
செந்தமிழ் இனத்தைச் சீரழித் திடவே
முந்து'இரா சீவ்' — எனும் முண்டையின் மகனே!

உலகப் பந்தின் உயிர்ச்செறி எம்மினம்
விலகாக் குறியினன் ஆகி, விதிர்ப்புற
யாழ்த்தமிழ் மக்களின் யாக்கைகள் எல்லாம்
போழ்த்துயிர் குடிக்கும் அரக்கப் பூதனே!

நீயுநின் துணையும் நின்னிரு மக்களும்
ஏயுமிவ் வுலகத்து இருக்குநாள் தோறும்
எந்தமிழ் நல்லினத் தேற்றம் குலைதலால்
வெந்தழி யும்நாள் விரைந்துனக் கெய்துக!

இடும்பைப் பிறப்பே! ஏழிரு கோடிக்
குடும்பம் அழிக்கும் கொடியனே! நின்னைக்
கடும்புலி வரியெனச் சாவு கவ்வுக!
திடுமென நினையொரு தீச்சுழல் சூழ்க!