பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டி நின்றோரை "வகுப்பு வாதிகள்” என்று கூறலாயினர். கட்டுரையாளர் இவ்வதம் குறிப்பிட்டு, அக்கருத்துக்கு அரணாக "தினசரி", "விடுதலை" போன்ற பத்திரிகளினின்றும் மேற்கோள் பகுதிகளை எடுத்துக் காட்டி விளக்குகிறார். கடந்த பல ஆயிரம் ஆண்டாண்டுகளாகப் பரவி, ஊன்றி, பெருவாரி மக்கள் கூட்டத்தினரை "பிறவி அடிமைகளாகவும் “நடைப் பிணங்ககளாகவும் ஆக்கி விட்ட இம்முறை அடியோடு அழிக்கப் பெற வேண்டுமெனக் கட்டுரையாளர் அடுத்து வலியுறுத்துகிறார். இங்கு தான் அவரி"பார்ப்பனியம்" ("பிராமணியம்") என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். தானும் தன் கருத்து. கொண்ட பிறரும் பிராமணர்கள் மீது வெறுப்பு கொண்டோ. ரல்லரென்றும், பிராமணிய முறையினையே தாங்கள் எதிர்ப்பதா கவும் கட்டுரையாளர் திட்ட வட்டமாகக் கூறுகிறார். பிராமணீயத்தினால் விளையும் தீமைகளை எடுத்துக்காட்ட வன்மொழிகளே பிரயோகப்படுத்தப்படகின்றன. உதாரணமாக சில பகுதிகள்;-- பார்ப்பனியத்தின் பலகை ஒரு பெரிய திராவிட சமுதாயம் "சின்னாபின்னப்பட்டுப் போய்க் கிடக்கிறது. பிறர்க்கு அடிமைகளாக, பேசும் ஊமைகளாக, நடைப் பிணமாகப் போய்விட்டது. தடித்த தோலராகி விட்டது. தகப்பனுக்கு மோக விபாதி இருப்பின் பிறக்கும் குழந்தை குருடாகும் என்பர் மருத்துவ (நூல் சுற்றேர். குருட்டுக் குழவிக்கு குவலயத்தின் குதூகலக் காட்சி எங்ஙனம் தெரியும்? அதுபோல் தான் திராவிட்ச் சமுதாயம் பார்ப்பனீயம் எனும் மேக நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறது. பிறக்கும் திராவிடன் குருடனாகிறான், கட்டுரையின் கடைசிப் பகுதி இம்முறையை அழித்தொழிப் பதற்கான மார்க்கங்களைக் கூறுகிறது. பெருவாரி மக்கள் கூட்டத்தாரிடையே ஒற்றுமை, கட்டுப்பாடு, வீரவுணர்ச்சி, தன்மா னம் ஏற்பட்டால்தான் இம்முறையினை ஒழிக்கமுடியும் .அறிவுத் தெளிவுடனிருக்கும் எவரும் பார்ப்பனியத்தைக் காரணங்காட்டி