பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டுதான் பிடிக்க வேண்டும் என்று அவர் கரசுரத்தி குரலில் கூறினார். அவரும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு மேலும் தொடர்ந்தார்:

    • உங்களுக்குப் புரிகிறதா? அந்த நாஜிக் கொடுமைகள்

அனைத்தையும் கண்டுதான் நாங்களும் மிரு க.மானோம்; இது வேறு விதமாகவும் இருந்திருக்க முடியாதுதான், நாங்கள் மனிதப் பிறவிகளை எதிர்நோக்கவில்லை, மாறாக ஏதோ ரத்தவெறி பிடித்த ராட்சசப் பிறவிகளைத்தான் எதிர் கொண்டோம் என்பது எங்கள் எல்லோருக்குமே தெளிவாகிவிட்டது. அவர்கள் ஒரு காலத்தில் தமது எந்திரக் கருவிகளை எத்தனை அத்துபடியான தன்மையோடு உற்பத்தி செய்தார்களோ, அதே அத்துபடியான தன்மையோடுதான் அவர்கள் நமது மக்களைச் சித்திரவதை செய்தனர்; கற்பழித்தனர் ; கொலை செய்தனர்.

  • இதன்பின் நாங்கள் மீண்டும் பின்வாங்க நேர்ந்தது;

என்றாலும் நாங்கள் வெறி பிடித்தவர்கள்போல். போரிட்டோம். “அநேகமாக எனது கம்பெனியில் இருந்த போர்வீரர்கள் எல்லோருமே சைபீரியர்கள்தான்; என்றாலும் நாங்கள் உக்ரேன் மண்ணைப் பாதுகாப்பதற்காக உண்மையிலேயே மூர்க்கமாகப் போரிட்டு நின்றோம். எனது நாட்டைச் சேர்ந்தவர்களில் பலர் உக்ரேனில் கொல்லப்பட்டனர்; எனினும் அவர் கள் கையினால் ஜெர்மானியர்களும் அதிக அளவில் தமது சாவைத் தழுவினர். நாங்கள் பின்வாங்கிக் கொண்டிருந்தோம் என்பது உண்மைதான். என்றாலும், அதே சமயத்தில் நாங்கள் அவர்களுக்குச் செம்மையடி கொடுக்கவும் செய்தோம்." லெப்டினென்ட் கெராசிமோவ் தமது சிகரெட்டை ஆசையோடு உள்ளிழுத்தவாறு, இப்போது வேறுபட்ட, மிருதுவான தொனியில் இவ்வாறு கூறினார்: "உக்ரேனில் மண்வளம் நன்றாக உள்ளது, அங்குள்ள இயற்கைக் காட்சியும் வனப்பு மிக்கதாக உள்ளது! பெரிய தாயினும், சிறியதாயினும், அங்குள்ள ஒவ்வொரு கிராமமும் எங்களுக்குச் சொந்த ஊரைப் போல் அருமை மிக்கதாக இருந்தது; ஒருவேளை அங்கு நாங்கள் எங்கள் ரத்தத்தைத் தரைமீது தாராளமாகப் பாய்ச்சியதுதான் அதற்குக் காரணமாக இருக்கலாம், ரத்தம் மனிதர்களைச் சகோதரர்கள். ஆக்கி விடுகிறது என்று மக்கள் கூறுவர் .. , அத்தகைய ஒரு கிராமத்தை விட்டு , நாங்கள் போக வேண்டிய காலம் வந்தபோது எங்கள்

இதயங்களே உடைந்து போயின. அதற்காக நாங்கள் மிகவும்

113