பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போது, அவை காஞ்சிரைச் செடிகளின் கசப்பையும் தம்முள் கிரகித்துக் கொண்டுவிடும். இத்தகைய் கோதுமை மணிகளை, அரைத்து மாவாக்கினால், அது கேக் செய்வதற்கோ, அது போன்ற வேறு உணவுப் பண்டங்களைச் செய்வதற்கோ பயன் புடாது.. ஆனால் அதை கொண்டு ரொட்டி செய்தால், அதில் சற்றே கசப்பு ருசி இருந்தபோதிலும், அந்த ரொட்டி ரொட்டி யாகத்தான். இருக்கும். மேலும், நெற்றி வியர்வை நிலத்தில். சிந்தப் பாடுபடுவோருக்கு இந்த ரொட்டி ஒரு வரப்பிரசாத் மாகவே தோன்றும்; ஏனெனில், அது மறு நாள் வேலையில் செலவிடுவதற்கான - ப ல த் ன த மனிதனுக்கு அமோகமான அளவில் வழங்குகிறது. மக்கள் போரினால் ஏற்பட்ட காயங்களை அதிசயிக்கத்தக்க அமோகமான வேகத்தில் ஆற்றி வருகின்றனர். இடிபாடுகளி லிருந்து நகரங்களும் கிராமங்களும் முளைத்தெழுகின்றன; எனது சொந்த வட்டாரமான டான்பாஸ் பிரதேசத்தில் சுரங்கங்கள் மீண்டும் உயிர்பெற்று எழுந்துள்ளன; இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் முட்செடி.களும் களைகளும் குத்திட்டு வளர்ந்து நின்ற வயல்களில், அதற்குள் அமோக தானிய விளைச்சல் கண்டுள்ளது; புத்துயி ரூட்டப் பெற்ற தொழிற்சாலை களின் புகைக் கூண்டுகளிலிருந்து புகை பொங்கி வந்து கொண்டு இருக்கிறது; சர்வ நாசம் கோலோச்சி நின்ற இடங்களில் புதிய தொழில் துறை ஆலைகள் முளைத்தெழுந்து கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் கண்ணார நேரில் கண்டும், மக்களது மேதத்து வத்தின் படைப்பாக்க வலிமையிடமிருந்து அசாத்தியமான வற்றையும்கூட எதிர்பார்க்கக் கற்றுக் கொண்டும் விட்ட ஒரு சோவியத் நபரும் கூட, நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கும் முன்னரே ஒரு புனரமைக்கப்பட்ட ராட்சச உலோகத் தொழிற்சாலை இயங்கத் தொடங்கியுள்ளது என்பதையோ, அல்லது இது வரையிலும் தெரிய வாாத யாரோ ஒரு ஸ்தக்கனோவைட் தொழிலாளி, ஒரு புதிய அகில-யூனியன் சாதனையையே சாதித் துள்ளார் என்பதையோ அறிய நேரும்போது, பிரமித்துப் போய், பின் மகிழ்ச்சிகரமான வியப்போடு தலையை ஆட்டிக் கொள்வார். நாட்டின் பெருமையாகத் திகழும் வெனின் கிராடு நகரத் தொழிலாளி வர்க்கம், , ஐந்தாண்டுத் - திட்டத்தை நான்கே ஆண்டுகளில் நிறைவேற்றி முடிக்க முயன்று பார்க்குமாறு, நாடெங்கிலுமுள்ள தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே 'சவால்

விடுத்துள்ளது. மேலும், ஒரு புதிய, எழில்மிக்க வாழ்க்கையின்

141