பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தாளர்கள் இவர்கள்! இவர்களை நாம் நம்பவே முடியாது! என்றுதான் நினைப்பார். நாம் படித்துள்ள புத்தகங்களை நினைவு கூரும்போது , இங்குள்ள நம்மில் ஒவ்வொருவரும், உற்பத்தியையும் தொழி லாளர்களது உலகையும் வருணித் துள்ள ஓர் நூலாசிரியர் : அவற்றைப் பற்றி ஒரு மேலோட்டமான விஷய ஞானத்தை மட்டுமே அவர் பெற்றிருந்தார், அவற்றின் நுணுக்கங்களையும் அருமையான அம்சங்களையும் பற்றித் தெரிந்து கொள்ளவே அவர் சிரமம் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ளக்கூடியது போன்ற பல உதாரணங்களை நினைவு படுத்த லாம். ஆசிரியர் தமது கனதப் பொருளை முதன்முதலில் ஐயந்திரிபற ஆய்ந்து அறிந்து கொள்ளாவிட்டால், அவரது புத்தகம் ஓர் உண்மையான இலக்கியப் படைப்பாக இருக்காது . நீங்கள் தொழிற்சாலையில் ஓர் இலக்கியக் குழுவைக் கொண் டிருக்கிறீர்கள்; அத்துடன் தமது குறிப்பிட்ட திறமையில் சிகரங் களை எட்டிப் பிடித்தவர்களும், த. மது கருவிகளைப் பயன் படுத்துவதில் அபாரமான திறமை படைத்தவர்களுமா ன தரப்பரிசீலனை இன்ஸ்பெக்டர்கள் கல்லூரியையும் பெற்றிருக் கிறீர்கள். ஏதாவதொரு நுணுக்க விவரத்தை வருணிக்கும் விஷயத்தில், உங்களது இளம் எழுத்தாளர்கள், படைக்கப்படும் புத்தகங்களின் தரத்தையும் நிச்சயமாகக் கவனித்துக் கொண் டிருக்கும் அந்த அனுபவமிக்க முதிய நபர்களின் உதவியை தாடவேண்டும். எங்கள் பங்குக்கு, எழுத்தாளர்களான நாங்கள் அந்த முதுபெரும் தொழிலாளர்களிடம் இவ்வாறு விண்ணப் பித்துக் கொள்கிறோம்: தயவு செய்து எங்களுக்கு ஒரு பெரிய சகாயம் செய்யுங்கள்; உங்கள் இளம் எழுத்தாளர்களுக்கு உதவுங்கள்; நாங்களும் எங்கள் பங்கை நிறைவேற்றுகிறோம், தொழிலா ளி வாசகர்களுக்கும் சோவியத் எழுத்தாளர் களுக்கும் இடையே நிறுவப்பட்டுள்ள தொடர்பு புலப்படுத்தப் படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்: இந்தத் தொடர்பு இருந்து வந்தால் மட்டுமே சோவியத் இலக்கியமான து மேலும் மேலும் சிறந்த புத்தகங்களை உருவாக்கும் என்று நான் மேலும் நம்புகிறேன்..... 1934 லட்சக்கணக்கான மக்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணமாக விளங்குவார் சோவியத் எழுத்தாளர்களின் அணி களிலிருந்து, அவர்கள் அனைவ ரிலும் மிகவும் துணிவு படைத்த, மிகவும் உறுதிப்பாடு

236

236