பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தையாயிரவரில் அவரும் ஒருவராக இருந்தார்; அவரும் ஒரு கூட்டுப் பண்ணையின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஒரே வித்தியாசம் என்னவெனில் அவர் இங்கு நியமிக்கப்படவில்லை; கலீனின் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பண்ணையில்தான் நியமிக்கப்பட்டார். நிச்சயமாக, இந்த முப்பத்தி நான்கு ஆண்டுகளும், அந்தப் புத்தகத்தின் ஆசிரியரான நான், இந்த இரண்டாவது தாவிதோவ் ஆகிய எங்கள் இருவரது தலைமயிரிலும் வெள்ளை நிறத்தைத் தடவி, எங்களைச் சற்றே முதுமையடையச் செய்துள்ளன. ஆயினும் நமது நாட்டுக்கு நாங்கள் தேவைப்படு வோமானால், நாங்கள் மீண்டும் ராணுவ அணிகளில் பணியாற்றவும் அல்லது தற்காப்புப் பணியில் பாடுபடவும் தயாராகவே இருக்கிறோம். மேலும், தொழில்துறைக்கும் கலைத் துறைக்கும் இடையேயுள்ள கூட்டணியை நாம் இவ்வாறுதான் புரிந்து கொள்கிறோம். நமது அருமை விருந்தினர்களில் மற்றொரு வரான மிக்கேல் காவ்ரிலோவிச் அலெக்சியேவைப் பற்றியும் நான் கூற விரும்புகிறேன். அவர் இப்போ தும் ஓர் இளைஞர் அல்ல; இதனை நீங்களே கண்டு கொள்ளலாம். ஆயினும், தொழில்துறையில் அறுபது ஆண்டுகள் உழைக்கும். ஒரு மனிதருக்கு அது என்ன செய்து விடுகிறது! இப்போதும் கூட அவர் முற்றிலும் பெண்கள் பிரியப்படக் கூடியவராகத்தான் இருக்கிறார் என்று என்னிடம் ரகசியமாகச் சொன்னார்கள், - கிரோவ் ஆலைத் தொழிலாளிகள் என்னோடு தங்கியிருந்த

  • அதே சமயத்தில், மாஸ்கோவிலிருந்தும் ராஸ்தாவிலிருந்தும்

வந்திருந்த சில எழுத்தாள நண்பர்களும் என்னோடு தங்கியிருந் தனர். நாங்கள் மீன் பிடிக்கச் செல்வது, ஆற்றில் குளிப்பது, வாழ்த்துக்கூறி மது அருந்துவது ஆகியவை தவிர, முக்கியமான விஷயங்களைக் குறித்தும் உரையாடினோம். கிரோவ் ஆலைத் தொழிலாளர்கள் தமது முற்றிலும் சட்டபூர்வமான கோரிக்கைகளை எங்களிடம் சமர்ப்பித்தனர்; அ த ர வ து தற்காலத்தைப் பற்றியும் தொழிலாளி வர்க்கத்தைப் பற்றியும் நாங்கள் மிக மிக அரிதாகவே புத்தகங்கள் எழுதுவதாக எங்கள் மீது குற்றம் சாட்டினர். முதலில் எழுத்தாளர் கள். ஒரு சர்வாம்சமான தற்காப்பு நிலையை மேற்கொண்டு, தமது சொந்த நிலையில் முற்றிலும் உறுதியோடு தான். விடாப்பிடியாக நின்று கொண்டிருந்தனர், ஆனால் அதன்பின், யுத்தச் செய்தி அறிக்கை க sரில் கூறப்படுவது போன்று, கிரோவ் ஆலைத் தொழிலாளர்களது வலிமைமிக்க படைகளின் நிர்ப்பந்தத்தால், அல்லது சரியாகச் சொன்னால் அவர் 332