பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொந்த சோவியத் மக்களுக்கு--எவரையும் என்றுமே தாக்காத. மாறாக, தாம் உருவாக்கியுள்ள அனைத்தையும், தமது சுதந்திரத் தையும் கௌரவத்தையும், தமது சொந்த விருப்பப்படியே வருங் காலத்தைத் தாமே கட்டியமைத்துக் கொள்ளும் உரிமையையும் எப்போதுமே பாதுகாத்துவர முடிந்துள்ள, கடின உழைப்பும், ஆக்க சக்தியும் வீரமும் செறிந்த மக்களுக்கு-மதிப்புமிக்க பாராட்டுரையை வழங்குவதேயாகும். ' மக்கள் தமது இதயத்தில் மேலும் மேம்படவும் மேலும் புனிதமடையவும் எனது புத்தகங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனது புத்தங்கள் அவர்கள் மனத்தில் அவர்களது சக மானிடர்களின் மீது அன்பை யும், மனிதாபிமான மற்றும் முன்னேற்ற லட்சியங்களுக்காகப் போராடும் வேட்கையையும் தோற்றுவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதனை நான் ஓரளவுக்கேனும் எய்தி யுள்ளேனாகில், நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு பிரசன்னமாகியுள்ள ஒவ்வொருவருக்கும், மற்றும் நோபெல் பரிசு பெற்றமைக்காக எனக்குத் தங்களது வாழ்த் துக்களை அனுப்பியுள்ள மக்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன், 1965 புத்தாண்டு வாழ்த்துக்கள் கடந்த ஆண்டு கழிந்து விட்டது. சோவியத் மக்களான தாம் அனை வரும். இந்த வரும் ஆண்டில் நாம் என்ன செய்தாத வேண்டும் என்பதைப் பற்றி ஏற்கெனவே சிந்தித்து வருகிறோம். நாம் நமது பெரிய, பொது வான திட்டங்களையும் நம்பிக்கை களையும் கொண்டிருக்கிறோம். மேலும், ஒவ்வொருவரும் தத்தம் புத்தாண்டு விருப்பங்களின் பட்டியலையும் கொண்டுள்ளோம். அவையனைத்துமே நனவாகு மாக! எனது அருமை நாட்டவர்கள் தமது பணியில் அதிகமான வெற்றியையும் உண்மையான ஆனந்தத்தையும் பெற நான் வாழ்த்துகிறேன். எனது சோதர எழுத்தாளர் களும் மற்றும் கலைத்துறைகளில் ஈடு பட்டுள்ள ஒவ்வொருவரும், புதிய மானிடனைப் பயிற்றுவிக்கும் சிரமமான, உன்னதமான பணியில் நமது கட்சிக்கு உதவும் படைப்புக்களைப் படைக்குமாறு நான் வாழ்த்துக் கூறுகிறேன், - உலகில் சமாதானம் நிலவு.வும், முன்னேற்றத்திலும் ஜன நாயகத்திலும் முன்னேறிச் செல்லவும், உலகிலுள்ள மக்கள் 346