பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். அவர் களைச் சுத்தமானவர்கள்"* "அசுத்தமானவர்கள்” என்று நான் பிரிக்கவில்லை, மூத்த தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர் களான நாமும் இன்னும் ஓரளவுக்குப் பயன்மிக்கவர்களாகத்தான் இருக்கிறோம் என்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நமது மாபெரும் சோவியத் யூனியனது! ஏனைய பிரஜைகள் அனை வரையும் போலவே, எழுத்தாளர்களும் ராணு வ சேவைப் பதிவேட்டில் இடம் பெற்றுள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்கள், மேலும் தோழர்கள் கிரெச்கோவும் எபிஷேவும் ரிசெர்வ் படையிலிருந்து நம்மை விடுவிக்காமலே இருந்து வருகிறார்கள்; எந்தவொரு அவசர நிலையிலும், எத்தகைய சந்தர்ப்பங்களிலும் நம்பியிருக்கக்கூடிய பழைய போர்வீரர் களான நாம், இப்போதும் பயனுள்ளவர்களாக இருந்து வருவ. தாகவே அவர்கள் கருதி வருகிறார்கள் என்பதுதானே இதற்கு அர்த்தம். உழைப்பில் மட்டுமல்ல, தற்காப்புப் பணியிலும்கூட, நாம் இன்னும் தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறோம் என்பதற்கு இது நமக்கு ஒரு போதிய சான்றுதான், மிகவும் முகஸ்துதியான சான்றுதான், இல்லையா? புதிய ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றிப் பேசும்போது, புள்ளி விவரங்களையும் சதவீதங்களையும் குறிப்பிட்டுப் பேசும் மொழியை என்னால் பயன்படுத்த முடியாது என்பதை நீங்களே உணர்வீர்கள். அடுத்த ஐந்தாண்டுகளில் எத்தனை பெரிய, நடுத்தர, சிறிய புத்தகங்கள் வெளிவரக் கூடும் என எதிர்பார்க்க லாம் என்று நீங்கள் என்னிடம் கேட்டால், சோவியத் எழுத் தாளர் யூனியனின் செயற் குழு முழுவதும்கூட, இதனைப்பற்றி உங்களுக்குக் கூற இயலாது என்பதையே நான் பதிலாகத் தர வேண்டும். ஆயினும், என்ன தான் இருந்தாலும், தரம்தான் மிக முக்கியமானதே தவிர, அளவு அல்ல. அடுத்து வரும் ஐந்தாண்டு களில், நமது வாசகர்கள் இப்போது நிறுவியுள்ள மிகவுயர்ந்த கலைநயத் தரங்களுக்கும் சித்தாந்தத் தரங்களுக்கும் முற்றிலும் பதிலளிக்கக் கூடிய குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்புக்களை , நாங்கள் படைத்துக் கொடுப்போம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். கட்சி மற்றும் மக்களின் லட்சியத்துக்கு நாம் நம்மை அர்ப் பணித்துள்ளதும், நமது பூரணமான பலம், மற்றும் நமது